கரோனா வைரஸின் தாக்கமானது உலகம் முழுவதும் பேரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதனால் இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவானது அமலாகியுள்ளது. இந்த காரணத்தால் பல்வேறு துறையினரும் அன்றாட வருமானத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இவ்வாறாக வருமானத்தை இழந்து தவித்து வரும் நபர்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவி செய்து வருகின்றனர். இவ்வாறு இருக்கும் நபர்களுக்கு நடிகைகள் பெரும்பாலும் உதவி செய்வதில்லை என்று பேச்சுக்கள் அதிகளவு எழுவது தொடர்கதையாகியுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, நடிகைகள் தங்களுக்கு தெரிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில், நடிகை ரகுல் ப்ரீத் சிங், டெல்லி நகரில் வாழும் மக்களில், 200 பேருக்கு தினமும் இரண்டு வேலை உனவுகளை வழங்கி வருகிறார். மேலும், ஊரடங்கு இல்லாத காலத்திலும் வழங்குவேன் என்று தெரிவித்துள்ளார்.