• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

கொரோனாவை முன்னிறுத்தி கருத்துச் சுதந்திரத்தை நசுக்க ராஜபக்சவினர் சதி!

Editor by Editor
April 8, 2020
in இலங்கைச் செய்திகள்
0
கொரோனாவை முன்னிறுத்தி கருத்துச் சுதந்திரத்தை நசுக்க ராஜபக்சவினர் சதி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கொரோனா வைரஸ் தொடர்பிலான வதந்திகள் பரப்பப்படுவதை தடுப்பதாகக் கூறி கருத்துச் சுதந்திரத்தை நசுக்க இடமளிக்க முடியாது என்று ஸ்ரீலங்காவின் முன்னணி ஊடகவியலாளர் அமைப்புக்கள் கூட்டாக அறிவித்துள்ளன.

தகுதிவாய்ந்த அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்படாத கொரோனா வைரஸ் குறித்த தகவல்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதற்கும் அவ்வாறான தகவல்களை பகிர்வதும் தண்டனைக்குறிய குற்றம் என்று தெரிவித்து பொலிசார் அறிவித்திருந்தனர்.

ஸ்ரீலங்கா பொலிஸ் திணைக்களம் ஏப்ரல் முதலாம் திகதி “சமூக வலைத்தளங்களில் வதந்திகளையே அல்லது குழப்பங்களை ஏற்படுத்தும் தகவல்களையோ வெளியிடும் நபர்களுக்கு கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்ற தலைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் பொலிஸ் திணைக்களத்தின் இந்த அறிக்கையை இன்று உறுதிப்படுத்திய பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண, சமூக வலைத்தளங்களில் கொரோனா தொடர்பிலான வதந்திகளை பரப்பினால் குறைந்தபட்சம் ஐந்து வருட சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஸ்ரீலங்காவின் முன்னணி ஊடகவியலாளர் அமைப்புக்கள் கூட்டாக இணைந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.

அதில் நாடு ஒரு பேரிடருக்கு முகம்கொடுத்திருக்கும் நிலையில் கருத்துச் சுதந்திரத்திற்கும், மொழி பயன்பாட்டிற்கும் சில வரையரைகள் இருக்க வேண்டியது அவசியமாகின்ற போதிலும் ஜனநாயகத்துடனும், ஏனைய மனித உரிமைகளுடனும் தொடர்புபட்ட விடையங்களாக இருப்பதால் மிகவும் அவதானத்துடனும் பரந்துபட்ட புரிதலுடனும் அந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

பேரிடர் காலங்களில் வதந்திகளும், போலியான தகவல்களும் வெளியிடப் படுவதால் சமூகத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்பதை பொறுப்புவாய்ந்த ஊடகவியலாளர் அமைப்புக்களான தாங்களும் முழுமையாக ஏற்றுக்கொள்வதாகவும் அந்த அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

இதனால் அவ்வாறான வதந்திகள் மற்றும் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் சமூகமயப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதுடன், ஊடகவியலாளர் அமைப்புக்களான தாங்களும் தனித்தும், கூடடாகவும் இவ்வாறான தகவல்கள் சமூகமயப்படுத்துவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அறிவித்துள்ளன.

எனினும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவற்றை தடுப்பதற்காகவெனக் கூறி கைதுசெய்து தண்டிக்க நடவடிக்கை எடுப்பது தீர்வாக அமையாது என்றும் ஊடகவியலாளர் அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.

வதந்திகளும், உண்மைக்குப் புறம்பான தகவல்களும் சமூக மயமாவதை தடுக்க வேண்டுமானால் உண்மையான தகவல்களை அதிகளவில் சமூக மயப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள ஊடகவியலாளர் அமைப்புக்கள், இந்த செயலால் மக்களின் உண்மையான தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமையும் உறுதிப்படுத்தப்படும் என்றும் தெரிவித்திருக்கின்றன.

அதேவேளை வதந்திகளையும், உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிடுவதை தடுக்கும் நடவடிக்கைகள் சமூக வலைத்தளங்களுக்கு மாத்திரமன்றி ஏராளமான பார்வையாளர்களை கொண்டிருக்கும் தொலைக்காட்சிகள் உள்ளிட்ட இலத்திரனியல் ஊடகங்களுக்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.

தொலைக்காட்சிகள் உட்பட நாட்டின் பிரதான ஊடகங்கள் கொரோனா வைரஸால் ஏற்படுத்தப்பட்டுள்ள நெருக்கடியான கால கட்டத்திலும் இனவாதத்தை தூண்டும் வகையில் பொய்யான தகவல்களை பரப்பி வருவதை தடுக்கும் வகையில் ஊடகங்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் அடங்கிய வழிகாட்டிகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அதன் ஊடாக சிறந்த ஊடக பாவணைக்கான வழிகாட்டிகளை பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.

அதேவேளை பொலிஸ் தலைமையகம் வெளியிடப்படும் அறிக்கைகள் சிங்கள மொழியில் மாத்திரம் இருக்கக்கூடாது என்றும் ஊடகவியலாளர் அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன. சிங்கள மொழியில் மாத்திரம் முக்கியான அறிக்கைகளை வெளியிடுவதால் அதிலுள்ள கட்டுப்பாடுகளை ஏனைய சமூகத்தினரால் அறிந்துகொள்ள முடியாத நிலை ஏற்படுவது மாத்திரமன்றி அவர்கள் தண்டிக்கப்படும் ஆபத்து இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளன.

இதனால் பொலிஸ் தலைமையகம் உட்பட அரசாங்கம் வெளியிடும் அனைத்து அறிக்கைகளும் நாட்டின் நடைமுறையிலுள்ள அனைத்து நிர்வாக மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டிதன் அவசியத்தையும் ஊடகவியலாளர் அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.

இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்,முஸ்லீம் மீடியா போரம், சுதந்திர ஊடகவியலாளர் அமைப்பு, தொழில்சார் ஊடகவியலாளர் சங்கம், இணையத்தள ஊடகவியலாளர் அமைப்பு, இளைய ஊடகவியலாளர் சங்கம் உட்பட முன்னணி ஊடகவியலாளர் அமைப்புக்கள் இணைந்து இந்த அவசர அறிக்கையை வெளியிட்டிருக்கின்றன.

Previous Post

சர்வாதிகாரத்தை நோக்கி இலங்கை…… சஜித்!

Next Post

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்!

Editor

Editor

Related Posts

ஒரே வாரத்தில் 22,000 ரூபாயால் அதிகரித்துள்ள தங்கத்தின் விலை! இன்றைய விலை நிலவரம்
இலங்கைச் செய்திகள்

ஒரே வாரத்தில் 22,000 ரூபாயால் அதிகரித்துள்ள தங்கத்தின் விலை! இன்றைய விலை நிலவரம்

December 27, 2025
உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சர்களின் பணம் – அநுரவை சீண்டும் நாமல் எம்.பி.
இலங்கைச் செய்திகள்

உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சர்களின் பணம் – அநுரவை சீண்டும் நாமல் எம்.பி.

December 26, 2025
வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்
இலங்கைச் செய்திகள்

வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்

December 26, 2025
இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்
இலங்கைச் செய்திகள்

இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்

December 25, 2025
வாடகை வீட்டுக்கு சென்ற மகிந்த ராஜபக்ச!
இலங்கைச் செய்திகள்

வாடகை வீட்டுக்கு சென்ற மகிந்த ராஜபக்ச!

December 25, 2025
மகிந்தவின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம்
இலங்கைச் செய்திகள்

மகிந்தவின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம்

December 24, 2025
Next Post
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்!

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
ஒரே வாரத்தில் 22,000 ரூபாயால் அதிகரித்துள்ள தங்கத்தின் விலை! இன்றைய விலை நிலவரம்

ஒரே வாரத்தில் 22,000 ரூபாயால் அதிகரித்துள்ள தங்கத்தின் விலை! இன்றைய விலை நிலவரம்

December 27, 2025
உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சர்களின் பணம் – அநுரவை சீண்டும் நாமல் எம்.பி.

உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சர்களின் பணம் – அநுரவை சீண்டும் நாமல் எம்.பி.

December 26, 2025
வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்

வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்

December 26, 2025
கிளிநொச்சியில் விபத்தில் பலியான தாய் – குழந்தை நினைவாக பேருந்து நிழற்குடை

கிளிநொச்சியில் விபத்தில் பலியான தாய் – குழந்தை நினைவாக பேருந்து நிழற்குடை

December 26, 2025

Recent News

ஒரே வாரத்தில் 22,000 ரூபாயால் அதிகரித்துள்ள தங்கத்தின் விலை! இன்றைய விலை நிலவரம்

ஒரே வாரத்தில் 22,000 ரூபாயால் அதிகரித்துள்ள தங்கத்தின் விலை! இன்றைய விலை நிலவரம்

December 27, 2025
உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சர்களின் பணம் – அநுரவை சீண்டும் நாமல் எம்.பி.

உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சர்களின் பணம் – அநுரவை சீண்டும் நாமல் எம்.பி.

December 26, 2025
வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்

வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்

December 26, 2025
கிளிநொச்சியில் விபத்தில் பலியான தாய் – குழந்தை நினைவாக பேருந்து நிழற்குடை

கிளிநொச்சியில் விபத்தில் பலியான தாய் – குழந்தை நினைவாக பேருந்து நிழற்குடை

December 26, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy