நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை வழங்கியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதனை விரைவாக கட்டுப்படுத்துவது தொடர்பில் விசேட வைத்தியர்களின் ஆசோனை பெறும் நோக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் வைத்தியர்களுக்கு இடையில நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது வைரஸ் தொற்றினை அடையாளம் கண்டு அவசியமான பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு நிலைமைக்கும் முகம் கொடுக்க கூடிய வகையில் தேவையான அனைத்து உபகரணங்களையும் கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
உலகின் மிகப்பெரிய நாடுகளை விடவும் இலங்கையில் கொரோனாவை விரைவாக கட்டுப்படுத்த ஜனாதிபதி முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு வைத்தியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
அத்துடன் வைரஸ் பரவாத பிரதேசங்களை பாதுகாப்பதற்கு முக்கியம் என வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அந்த பிரதேசங்களுக்கு யாரையும் செல்லவிடாமல் தடுக்க வேண்டும். முடிந்தளவு வீட்டில் இருப்பதே முக்கியம் என அவர்கள் கூறியுள்ளனர்.