இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 6,412ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக 199 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது வரை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு 504 பேர் குணமடைந்துள்ளனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிரா – 1,364, தமிழகம் – 834, டெல்லி – 720, ராஜஸ்தான் – 463 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 12 மணி நேரத்தில் 547 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய முழுவதும் 12 மணி நேரத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.