கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனால் பல தொழில்கள் முடைங்கியுள்ளது. தினக்கூலி தொழிலாளிகளும் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். இதனால் பல பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை பாதிக்கப்பட்டவர்கள் செய்து வருகின்றனர்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தை சேர்ந்த பிரபல நடிகர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் பிரபல நகைச்சுவை நடிகர் யோகிபாபு தன்னால் முடிந்த உதவியை செய்துள்ளார். நேற்று அவர் 1,250 கிலோ அரிசியை நடிகர் சங்கத்திற்கு வழங்கியுள்ளார்.