இலங்கையில் இன்று (12) கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதன் மூலம் நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 56 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்நிலையில், இதுவரை 203 பேர் நோய்த் தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், தற்போது வைத்தியசாலையில் 140 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நோய்த் தொற்று சந்தேகத்தில் 154 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைத்தியசாலையில் உள்ளார்கள்.
அதேவேளை கொரோனா தொற்றினால் இலங்கையில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
இன்றைய தினம் இதுவரை 4 புதிய கொரோனா தொற்றாளர்கள் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



















