• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

கொரோனாவின் உக்கிரம்! இலங்கையில் 24 மணி நேரத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி!

Editor by Editor
April 15, 2020
in இலங்கைச் செய்திகள்
0
கொரோனாவின் உக்கிரம்! இலங்கையில் 24 மணி நேரத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி!
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

வடக்கின் பலாலி மற்றும் முழங்காவில் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தோரில் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனைகளில் உறுதியாகியுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் சத்தியமூர்த்தி வீரகேசரிக்கு தெரிவித்தார்.

இதனூடாக இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை இரவு 10.00 மணியாகும் போது 233 ஆக அதிகரித்துள்ளது.

பலாலி இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் , அரியாலை பகுதியில் மத போதகர் ஒருவரின் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள், அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தோர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், அங்கிருந்த 14 பேருக்கு கொரோனா தொடர்பிலான பரிசோதனைகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந் நிலையில் அதில் 8 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் சத்தியமூர்த்தி குறிப்பிட்டார்.

இந் நிலையில் ஜா – எல தொற்றாளர் ஒருவருடன் இருந்த தொடர்பாடல் காரணமாக ராகமை மற்றும் வெலிசறை வைத்தியசாலைகளின் சுகாதார ஊழியர்கள் 27 பேர் மன்னார், முழங்காவில் கடற்படை முகாமில் உள்ள தனிமைப்படுத்தும் மத்திய நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

ராகமை வைத்தியசாலை என அறியப்படும் கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையின் 22 சுகாதார ஊழியர்களும் வெலிசறை சுவாச நோய்க்கான தேசிய வைத்தியசாலையின் 5 சுகாதார ஊழியர்களும் இவ்வாறு தனிமைப்படுத்தலுக்காக முழங்காவில் முகாமுக்கு அனுப்பப்பட்டனர்.

அவர்களில் சிலருக்கு முன்னெடுக்கப்பட்ட கொரோனா தொற்று தொடர்பிலான பரிசோதனைகளில் இன்றைய தினம் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக விஷேட வைத்திய நிபுணர் சத்தியமூர்த்தி சுட்டிக்காட்டினார். அதன்படி இன்று மட்டும் இவ்விரு தனிமைபப்டுத்தல் முகாம்களிலும் இருந்தவர்களில் 12 பேர் தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்று பரவல் தொடர்பில் பகுப்பாய்வு செய்யும் போது, நாட்டில் அதன் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சுகாதாரத் தரப்பினரால் முடிந்துள்ளமை வெளிப்படுவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் சிரேஷ்ட ஆய்வாளர் விஷேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற விஷேட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதுவரை இலங்கையில் 3 வெளிநாட்டவர்கள் உட்பட 233 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு வெளிநாட்டவர் உட்பட 61 பேர் பூரண குணமடைந்து இன்று வரை வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

மேலும் 163 பேர் தொடர்ந்தும் அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை வெலிகந்த முல்லேரியா ஆதார வைத்தியசாலைகள் சிலாபம் – இரணவில் வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோராக அடையாளப்படுத்தப்பட்டாலும் 12 பேர் இன்று இரவு 10.00 மணி வரையிலான காலப்பகுதியில், பலாலி, முழங்காவில் முகாம்களிலேயே மருத்துவ கண்காணிப்பின் கீழ் இருந்தனர். மேலும் நாடளாவிய ரீதியில் 24 வைத்தியசாலைகளில் 142 பேர் கொரோனா சந்தேகத்தில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை அதிகமான தொற்றாளர்கள் மேல் மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 119 ஆகும்.

இதில் கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தலா 45 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 29 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பில் அடையாளம் காணப்பட்டவர்களில் மொறட்டுவை, நுகேகொட, ஹோமகம, மருதானை, பத்தரமுல்லை சுகாதார அத்தியட்சர் அதிகார பிரிவுகளில் தலா இருவர் வீதமும் தெஹிவளை சுகாதார அத்தியட்சர் அதிகார பிரிவில் 8 பேரும் பன்னிபிட்டிய சுகாதார அத்தியட்சர் அதிகார பிரிவில் ஒருவரும், இரத்மலானை சுகாதார அத்தியட்சர் அதிகார பிரிவில் 5 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஏனையோர் கொழும்பு மாநகர சபை சுகாதார அத்தியட்சர் அதிகார எல்லைக்குள் அடையாளம் காணப்பட்டவர்களாவர்.

களுத்துறை மாவட்டத்தில் பேருவளை சுகாதார அத்தியட்சர் அதிகார பிரிவில் 53 பேரும் பண்டாரகம சுகாதார அத்தியட்சர் அதிகார பிரிவில் 5 பேரும் அடையாளம் காணப்பட்டோரில் அடங்குகின்றனர்.

அத்துடன் கம்பஹாவில் அடையாளம் காணப்பட்டுள்ள 25 பேரில் ஜா எல சுதுவெல்லை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மட்டும் 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மூவர் நீர்கொழும்பு சுகாதார அத்தியட்சர் அதிகார பிரிவில் அடையாளம் காணப்பட்டவர்களாவர். ஏனையோர் கடான, சீதுவ, மினுவாங்கொடை, வத்தளை மற்றும் மஹர பகுதிகளில் இருந்து அடையளம் காணப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தின் பகுதிகளை தவிர்த்து புத்தளம் மாவட்டத்தில், 34 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ். மாவட்டத்தில் 15 பேரும், கண்டி மவட்டத்தில் 7 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 5 பேரும் கொரோனா தொற்று குறித்து அடையாளம் காணப்பட்ட 233 பேரில் உள்ளடங்குகின்றனர்.

இதனைவிட குருணாகல் மாத்தறை அம்பாறை மற்றும் கேகாலை மாவட்டங்களில் தலா இருவர் வீதமும் காலி, மட்டக்களப்பு, பதுளை மாவட்டங்களில் தலா ஒவ்வொருவர் வீதமும் கொரோனா தொற்று தொடர்பில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனைவிட 3 வெளிநாட்டவர்களும் வெளிநாட்டிலிருந்து வந்த நிலையில் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பட்ட 37 பேரும் கொரோனா தொற்று குறித்து அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில் உள்ளடங்குகின்றனர்.

இந் நிலையில் தற்போதும் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்த அல்லது அவர்களுடன் நெருங்கிப் பழகியமை தொடர்பில் 1500 பேர் தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இராணுவத்தின் 12 தனிமைப்படுத்தல் மையங்களிலும் கடற்படையின் 4 தனிமைப்படுத்தல் மையங்களிலும் அவர்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்தும் தேசிய நடவடிக்கை மையத்தின் தலைவர் , இராணுவத் தளபதி லெப்டினன் கொமாண்டர் சவேந்திர சில்வா கூறினார்.

தற்போது கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பெரும்பாலும் தனிமைப்படுத்தல் மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு வரும் நிலையிலேயே குறித்த தொற்றின் பரவல் ஒரு வகையில் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக சுகாதார தரப்பினர் நம்புகின்றனர்.

இது குறித்து கருத்துரைத்த சுகாதார சேவைகள் திணைக்களத்தின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் சிரேஷ்ட ஆய்வாளர் விஷேட வைத்திய நிபுணர் சுதத் சமர வீர,

‘ கடந்த 5 நாட்களை நோக்கும் போது தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். எனினும் அவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட நபர்களுடன் பழகிய நிலையில் அறிகுறிகள் இல்லாமல் இருந்த தொடர்பாடல் வட்டத்துக்குள் வருபவர்களாவர்.

இந் நிலைமையில் இருந்து நாம் ஒருவாறு இந்த தொற்றின் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளமை தெளிவாகிறது.

இந்த கட்டுப்பாட்டுக்கு பிரதானமான காரணம் ஒன்றுள்ளது. தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதும், அந்த பகுதியை தனிமைப்படுத்தி அவரது தொடர்பாடல் வலையமைப்பு வட்டத்தை முதலில் அடையாளம் கண்டு, அவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு அறிகுறிகள் உள்ளதா என பரீட்சித்து அவர்களுக்கும் கொரோனா தொடர்பில் பரிசோதனைகளை முன்னெடுத்தமையே இந்த கட்டுப்பாட்டுக்கு காரணமாகும்.

அடையாளம் காணப்படாத தொற்றாளர்கள் ஒரு சிலர் சமூகத்தின் மத்தியில் இருக்கலாம். தற்போதைய நிலைமையை வைத்து பார்க்கும் போது, தற்போதைய கட்டுப்பாட்டு நிலைமை தொடர்வது உறுதியாகும் சந்தர்ப்பத்தில், எமக்கு ஊரடங்கை தளர்த்தி சாதாரண நிலைமைக்கு திரும்புவது குறித்து திட்டமிட முடியும்.

மக்கள் எவ்வாறு ஊரடங்கு அகற்றப்படும் சந்தர்ப்பத்தில் செயற்பட வேண்டும் என்பதெல்லாம் அப்போது தீர்மானிக்கப்படலாம். அனேகமாக இந்த மாத இறுதிக்குள் எமக்கு அந் நிலைமையை அடையலாம் என உறுதியாக நம்பலாம்.’ என தெரிவித்தார்.

சுவிஸ் மக்களில் பெரும்பாலானோர் ஈஸ்டர் பண்டிகையின்போதும் கொரோனா கட்டுப்பாடுகளை மதித்து நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருந்தாலும், இளைஞர்கள் கட்டுப்பாடுகளை மீறியதால் பொலிசார் அழைக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தேறியுள்ளன.

சில குடும்பங்கள் மொத்தமாக வெளியே சென்றதன்மூலம் ஐந்து பேருக்கு மேல் சேர்ந்து கூடக்கூடாது என்ற விதியை மீறினாலும், பெரும்பாலான குடிமக்கள் வெளியில் இனிய வானிலை நிலவியபோதிலும் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து விதிகளுக்கு கீழ்ப்படிந்துள்ளனர்.

பண்டிகை காலமானாலும் வழக்கத்தை விட குறைந்த போக்குவரத்தே காணப்பட்டதாக சுவிஸ் வானொலி தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் கடந்த வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 700க்கும் 800க்கும் இடையில் மாறி மாறி இருந்த நிலையில், ஈஸ்டர் வார இறுதியில் அது குறைந்து சுமார் 400 ஆக இருந்துள்ளது.

இந்நிலையில், மார்ச் மாதம் அமுல் படுத்தப்பட்ட கொரோனா கட்டுப்பாடுகள் சில ஏப்ரல் மாத இறுதிவாக்கில் படிப்படியாக குறைக்கப்பட இருக்கின்றன.

எத்தகைய மாற்றங்கள் செய்யப்பட உள்ளன என்பது குறித்த முடிவு ஏப்ரல் 16 அன்று அறிவிக்கப்பட உள்ளது.

Previous Post

பிரித்தானியாவில் 24 மணித்தியாலத்தில் 778 பேர் மரணம்

Next Post

இலங்கையில் கொரோனாவால் அதிகமானோர் பாதிக்கப்பட்ட பகுதி இதுவே!

Editor

Editor

Related Posts

காட்டில் கொடூர கொலை ; கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு
இலங்கைச் செய்திகள்

காட்டில் கொடூர கொலை ; கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

December 18, 2025
தென்னிலங்கையை உலுக்கிய சோகம் – அரசாங்க வைத்தியசாலையில் யுவதிக்கு எமனாக மாறிய மருந்து
இலங்கைச் செய்திகள்

தென்னிலங்கையை உலுக்கிய சோகம் – அரசாங்க வைத்தியசாலையில் யுவதிக்கு எமனாக மாறிய மருந்து

December 18, 2025
முல்லைத்தீவில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு
இலங்கைச் செய்திகள்

முல்லைத்தீவில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு

December 18, 2025
இளங்குமரன் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
இலங்கைச் செய்திகள்

இளங்குமரன் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

December 18, 2025
‘கெஹெல்பத்தர பத்மே’ வழங்கிய மற்றுமொரு தகவல்
இலங்கைச் செய்திகள்

‘கெஹெல்பத்தர பத்மே’ வழங்கிய மற்றுமொரு தகவல்

December 17, 2025
இலங்கையில் இருந்து துருக்கி நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு!
இலங்கைச் செய்திகள்

இலங்கையில் இருந்து துருக்கி நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு!

December 17, 2025
Next Post
இலங்கையில் கொரோனாவால் அதிகமானோர் பாதிக்கப்பட்ட பகுதி இதுவே!

இலங்கையில் கொரோனாவால் அதிகமானோர் பாதிக்கப்பட்ட பகுதி இதுவே!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
காட்டில் கொடூர கொலை ; கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

காட்டில் கொடூர கொலை ; கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

December 18, 2025
தென்னிலங்கையை உலுக்கிய சோகம் – அரசாங்க வைத்தியசாலையில் யுவதிக்கு எமனாக மாறிய மருந்து

தென்னிலங்கையை உலுக்கிய சோகம் – அரசாங்க வைத்தியசாலையில் யுவதிக்கு எமனாக மாறிய மருந்து

December 18, 2025
முல்லைத்தீவில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு

முல்லைத்தீவில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு

December 18, 2025
இளங்குமரன் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

இளங்குமரன் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

December 18, 2025

Recent News

காட்டில் கொடூர கொலை ; கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

காட்டில் கொடூர கொலை ; கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

December 18, 2025
தென்னிலங்கையை உலுக்கிய சோகம் – அரசாங்க வைத்தியசாலையில் யுவதிக்கு எமனாக மாறிய மருந்து

தென்னிலங்கையை உலுக்கிய சோகம் – அரசாங்க வைத்தியசாலையில் யுவதிக்கு எமனாக மாறிய மருந்து

December 18, 2025
முல்லைத்தீவில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு

முல்லைத்தீவில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு

December 18, 2025
இளங்குமரன் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

இளங்குமரன் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

December 18, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy