கொரோனா வைரஸ் தொற்று பரவுவதனை தடுக்கும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு அரசாங்கம் அவசரப்படக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளளது.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே இதனை தெரிவித்துள்ளார்.
பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,
தடைகளை நீக்குவது தொடர்பிலான சாத்தியப்பாடுகள் குறித்து தற்போதைக்கு எதிர்வு கூற முடியாது.
மேலும், உலக அளவில் நோய் கட்டுப்படுத்தப்படும் சந்தர்ப்பத்தில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களின் ஊடாக நாட்டுக்குள் நபர்கள் பிரவேசிப்பது தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்தப்பட வேண்டும்.
நாட்டுக்குள் பிரவேசிக்கும் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
புத்தாண்டு காலத்தில் இந்த வைரஸ் தொற்று பரவுவதனை தடுப்பதற்கு மக்கள் பாரியளவில் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.
இதற்கு அனைவருக்கும் நன்றி பாராட்டுகிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



















