• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

இலங்கையில் கொரோனா அச்சம் அதிகாரிப்பு…..நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள்!

Editor by Editor
April 17, 2020
in இலங்கைச் செய்திகள்
0
இலங்கையில் கொரோனா அச்சம் அதிகாரிப்பு…..நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கொழும்பு மத்தி, வடக்கு பகுதிகளில் கொரோனா வைரஸ் அச்சம் அதிகரித்துள்ளது.

கம்பஹா மாவட்டம், ஜா எல – சுதுவெல்ல பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான போதைப்பொருள் பாவனையாளர்கள் சிலரின் நடமாட்டம் மற்றும் தொடர்பாடல் வலையமைப்பை மையபப்டுத்தி கடற்படை உளவுப் பிரிவும் பொலிஸாரும் முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் இந்த விடயம் வெளிப்பட்டுள்ள நிலையில் முன் பாதுகாப்பு நடவடிக்கையாக இவ்விரு பகுதிகளிலும் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் ஜா -எல தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த, கொரோனா தொற்றாளர் ஒருவர் கொழும்பு வடக்கு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் நாகலகம் வீதி பகுதியில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதால் நேற்று அப்பகுதி முற்றாக முடக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

ஜா -எல பகுதியில் அடையாளம் காணப்பட்ட போதைப்பொருளுடன் தொடர்புடைய தொற்றாளர்களின் நடமாட்டம் தொடர்பில் உளவுத்துறை ஆராய்ந்துள்ள நிலையில் மாளிகாவத்தை, கிராண்ட்பாஸ், புறக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த பலரை தனிமைப்படுத்த வேண்டி ஏற்பட்டதாகவும்,

இந்த விவகாரத்தில் தொடர்ந்தும் பாதுகாப்புத் தரப்பினர் தொற்றாளர்களுடன் தொடர்புடையோரை தேடி கண்டுபிடித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை மையத்தின் தலைவர் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அத்துடன் கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்த, இந்தியாவுக்கு யாத்திரை சென்று திரும்பிய 59 வயதுடைய பெண் ஒருவர் 33 நாட்களின் பின்னர் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டார்.

அதனையடுத்து பண்டாரநாயக்க மாவத்தையின் அப்துல் ஹமீட் சந்தி வரையிலான பகுதி 58 வீடுகளுடன் முற்றாக முடக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் ஜா எல தொற்றாளர் ஒருவருடனான தொடர்புகள் காரணமாக, புறக்கோட்டை மற்றும் டாம் வீதி பகுதியில் 80 இற்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பட்டும், பலர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அப்பகுதிகளில் விஷேட பாதுகப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக புறக்கோட்டை பகுதியிலிருந்து தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்பட்ட பலரில், புறக்கோட்டை பகுதியில் கூலித் தொழிலாளர்களாக பணிபுரியும் பலர் உள்ளனர்.

இந் நிலையில் புறக்கோட்டையின் மொத்த விற்பனை நிலையங்களை மூடுவதற்கு வர்த்தகர்கள் இன்று நடவடிக்கை எடுத்திருந்தனர். அத்துடன் மெனிங் சந்தையை மூடி வைப்பது தொடர்பிலும் வர்த்தகர்களின் அவதானம் திரும்பியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கொழும்பு மாவட்டத்திலேயே அதிக தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 7.00 மணியளவில் கொழும்பில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் எண்ணிக்கை 49 ஆக இருந்தது.

இதில் இறுதியாக நேற்று கொட்டாஞ்சேனை பண்டாரநாயக்க மாவத்தை பகுதியை சேர்ந்த 59 வயதான பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டிருந்தார்.

அவர் தனது கணவர் மற்றும் மகனுடன் இந்தியாவுக்கு யாத்திரை சென்று கடந்த மார்ச் 12 ஆம் திகதி நாடு திரும்பி பொலிஸிலும் பதிவு செய்து 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர் என்பதும், 33 நாட்களின் பின்னரேயே அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி ரத்நாயக்க தெரிவித்தார்.

இந்த பெண் ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களால் அவதிப்படுபவர் எனும் நிலையில், கடந்த 14 ஆம் திகதி அவருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து கொழும்பு மாநகர சபை அம்பியூலன்ஸ் வண்டி ஊடாக தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளிலேயே அவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் அவரது கணவர் மற்றும் மகனுக்கும் கொரோனா தொடர்பில் பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் மகனுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதியாகியுள்ளது.

இந் நிலையிலேயே பண்டாரநாயக்க மாவத்தை பகுதியில் 58 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டத்தின் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் டி வாஸ் லேன், மருதானை பொலிஸ் பிரிவின் இமாமுல் அரூஸ் மாவத்தை, இரத்மலானையின் ஸ்ரீ ஜனநானந்த மாவத்தை ஆகிய பகுதிகள் ஏற்கனவே முடக்கப்பட்டு அல்லது கடும் விதிகளின் கீழ் கண்காணிக்கப்பட்டுவரும் நிலையிலேயே இன்று முதல் புதிதாக கிராண்ட்பாஸ் பகுதியில் நாகலகம் வீதியும், கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவின் பண்டாரநாயக்க மாவத்தையும் முடக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக நாகலகம் வீதியின் 113 பேர் ஏற்கனவே சம்பூர் கடற்படை முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் 30 குடும்பங்கள் வரை அப்பகுதியில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இது இவ்வாறிருக்க, ஜா-எல பகுதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர் ஒருவருடன் பழகிய நபர் ஒருவர், ஊரடங்கு உத்தரவை மீறியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,

அந்த கைது நடவடிக்கைகளுடன் தொடர்புபட்ட கொழும்பு – வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்தின் 20 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தெஹிவளை – அத்திடிய பகுதியில் உள்ள பொலிஸ் பல்கலைக்கழக வளாகத்தில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த 20 பேரில் 13 பேர் வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்தின் நிர்வகத்தின் கீழும் ஏனையோர் சட்ட மா அதிபர் திணைக்கள பாதுகாப்பு அரணிலும் கடமையாற்றுபவர்கள் என பொலிஸார் கூறினர்.

ஊரடங்கை மீறியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட குறித்த நபர், போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் அவர் துப்புரவு தொழிலாளியாக செயற்படும் நிலையில் அவருடன் தொடர்புடைய துப்புரவு தொழிலாளர்கள், யாசகர்கள் என பலரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புத் தரப்பினர் கூறினர்.

Previous Post

வடமாகாணம் முழுவதும் மின்வெட்டு என வெளியான தகவல் உண்மையில்லை!

Next Post

வழமைக்கு திரும்புகிறது இலங்கை!

Editor

Editor

Related Posts

உலக சந்தையில் எகிறும் தங்கம் மற்றும் வெள்ளி விலை
இலங்கைச் செய்திகள்

உலக சந்தையில் எகிறும் தங்கம் மற்றும் வெள்ளி விலை

January 1, 2026
2025இல் இலங்கை ரூபாயின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி
இலங்கைச் செய்திகள்

2025இல் இலங்கை ரூபாயின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி

January 1, 2026
தப்பியோடிய டிப்பர் மீது துப்பாக்கி பிரயோகம்
இலங்கைச் செய்திகள்

தப்பியோடிய டிப்பர் மீது துப்பாக்கி பிரயோகம்

December 31, 2025
நாட்டில் சில இடங்களில் 2.00 மணிக்குப் பின்னர் மழை! காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு
இலங்கைச் செய்திகள்

நாட்டில் சில இடங்களில் 2.00 மணிக்குப் பின்னர் மழை! காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

December 30, 2025
சிறையில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தொடர்பில் வெளியான தகவல்
இலங்கைச் செய்திகள்

சிறையில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தொடர்பில் வெளியான தகவல்

December 30, 2025
கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் குழு – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கைச் செய்திகள்

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் குழு – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

December 30, 2025
Next Post
வழமைக்கு திரும்புகிறது இலங்கை!

வழமைக்கு திரும்புகிறது இலங்கை!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
40 வயதுக்கு பின்னர் ராஜ வாழ்க்கை வாழும் ராசியினர் அவர்கள் தானாம்… உங்க ராசியும் இருக்கா?

40 வயதுக்கு பின்னர் ராஜ வாழ்க்கை வாழும் ராசியினர் அவர்கள் தானாம்… உங்க ராசியும் இருக்கா?

January 1, 2026
2026 இல் காத்திருக்கும் ஆபத்து ; பாபா வாங்காவின் திகிலை எகிறவைக்கும் கணிப்புகள்

2026 இல் காத்திருக்கும் ஆபத்து ; பாபா வாங்காவின் திகிலை எகிறவைக்கும் கணிப்புகள்

January 1, 2026
உலக சந்தையில் எகிறும் தங்கம் மற்றும் வெள்ளி விலை

உலக சந்தையில் எகிறும் தங்கம் மற்றும் வெள்ளி விலை

January 1, 2026
2025இல் இலங்கை ரூபாயின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி

2025இல் இலங்கை ரூபாயின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி

January 1, 2026

Recent News

40 வயதுக்கு பின்னர் ராஜ வாழ்க்கை வாழும் ராசியினர் அவர்கள் தானாம்… உங்க ராசியும் இருக்கா?

40 வயதுக்கு பின்னர் ராஜ வாழ்க்கை வாழும் ராசியினர் அவர்கள் தானாம்… உங்க ராசியும் இருக்கா?

January 1, 2026
2026 இல் காத்திருக்கும் ஆபத்து ; பாபா வாங்காவின் திகிலை எகிறவைக்கும் கணிப்புகள்

2026 இல் காத்திருக்கும் ஆபத்து ; பாபா வாங்காவின் திகிலை எகிறவைக்கும் கணிப்புகள்

January 1, 2026
உலக சந்தையில் எகிறும் தங்கம் மற்றும் வெள்ளி விலை

உலக சந்தையில் எகிறும் தங்கம் மற்றும் வெள்ளி விலை

January 1, 2026
2025இல் இலங்கை ரூபாயின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி

2025இல் இலங்கை ரூபாயின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி

January 1, 2026
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy