இலங்கையில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஹரித்த அழுத்கே, பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
இத்தாலியை விட ஆரம்பகால கொரோனா பரவும் வேகம் இலங்கையில் கூடியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் பல கொரோனா நோயாளர்கள் வெறுமனே எந்த மருத்துவ பரிசோதனையும் இல்லாமல் இன்று சமூகத்தில் நடமாடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் இயங்கும் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.



















