அமெரிக்காவில் வாழும் சீன மாணவி ஒருவர் தன் சொந்த ஊருக்குத் திரும்பிய நிலையில், அமெரிக்காவை குற்றம் சாட்டக் காத்திருக்கும் சீனா, அந்த மாணவிதான் அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கு கொரோனாவைக் கொண்டுவந்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால்… சீனா திரும்பியதும் அந்த மாணவிக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது அவரது சோதனை முடிவுகள் அவருக்கு கொரோனா இல்லை என்று கூறின…
இருந்தும் விடாத சீன அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்ட அந்த பெண்ணுக்கு மீண்டும் மீண்டும் பரிசோதனை செய்து, சமீபத்திய இரண்டு சோதனைகளில் அவரது உடலில் கொரோனா ஆன்டிபாடிகள் இருப்பது தெரியவந்துள்ளதாகவும், அவருக்கு ஏற்கனவே கொரோனா இருந்ததுதான் அதற்கு காரணம் என்றும் கூறியுள்ளனர்.
Han (22) என்று அழைக்கப்படும் இளம்பெண் சீனாவில் கல்வி பயின்று வருகிறார். நியூயார்க்கிலிருந்து சீனாவிலிருக்கும் தன் சொந்த ஊரான Harbin என்ற நகரத்துக்குத் திரும்பியுள்ளார் அவர்.
Harbinஇல் சுமார் 70 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. மேலும் 4,000 பேர் கொரோனா பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நியூயார்க்கிலிருந்து Harbinக்கு திரும்பிய Hanதான் கொரோனாவை அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கு கொண்டுவந்துவிட்டதாக சீன அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நியூயார்க்கிலிருந்து திரும்பிய Han தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அந்த சோதனைகளில் அவருக்கு கொரோனா இல்லை என்று தெரியவந்தது. உண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த Chen (87) என்னும் மனிதரிடமிருந்துதான் பலருக்கு கொரோனா பரவியிருந்தாலும், Harbin சுகாதாரத்துறை அதிகாரிகள் Han மீதே பழியைப் போட்டனர்.
Han தன் உறவினரான Cao என்பவருக்கு கொரோனாவைப் பரப்பியதாகவும், அவரிடமிருந்து Chenக்கு கொரோனா பரவியதாகவும், Chen ஏராளமானோருக்கு கொரோனாவை பரப்பியதாகவும் கூறியுள்ள அதிகாரிகள் Hanதான் ‘super-spreader’ என்று அவர் மீது பழியைப் போட்டுள்ளனர்.