வெல்லம்பிட்டி பகுதியில் தாயும், 4 மாத குழந்தையும் கொரோனா தொற்றிற்கு இலக்காகியுள்ளனர்.
கொரோனா மையமாக உள்ள பண்டாரநாயக்க மாவத்தைக்கு சட்டவிரோதமாக சென்று, அங்கு கொரோனா தொற்றாளர் ஒருவருடன் 3 நாட்கள் தங்கியிருந்தமையினாலேயே இவர்கள் தொற்றிற்கு உள்ளாகியுள்ளனர்.
இளம் தாயொருவர் தனது 4 மாத குழந்தையுடன் அண்மையில் பண்டாரநாயக்க மாவத்தைக்கு சென்று, அங்கு தனது தாயாருடன் 3 நாட்கள் தங்கியிருந்துள்ளார்.
அண்மையில் நடந்த பரிசோதனையில் பண்டாரநாயக்க மாவத்தையில் வசிக்கும் தாயாருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து, அவரை சந்தித்தவர்கள் பற்றிய தகவல் திரட்டப்பட்டதில், மகள் திருட்டுத்தனமாக வந்து சென்றது தெரிய வந்தது.
வெல்லம்பிட்டியிலுள்ள அவரது வீட்டிலிருந்தவர்கள் இன்று பரிசோதனைக்குட்படுத்தியதில், இளம் பெண்ணும், 4 மாத குழந்தையும் தொற்றிற்குள்ளானது தெரிய வந்தது.
இதையடுத்து, அந்த குடும்பத்தின் உறுப்பினர்கள் தனிமைப்படுத்தல் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அந்த பகுதியிலுள்ள பல வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.