• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

கூட்டமைப்பினரிடம் பிரதமர் மஹிந்த வழங்கிய வாக்குறுதி! எதற்கு தெரியுமா?

Editor by Editor
May 5, 2020
in இலங்கைச் செய்திகள்
0
கூட்டமைப்பினரிடம் பிரதமர் மஹிந்த வழங்கிய வாக்குறுதி! எதற்கு தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நீண்டகாலமாக சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் உள்ள சட்ட முறைமைகளை ஆராய்வதாகவும், பொது மன்னிப்பில் விடுவிக்க முடியுமா என்பது குறித்து ஜனாதிபதியுடன் பேசுவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் வாக்குறுதியளித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 500 ஏக்கர் நிலத்தை விடுவிக்கவும் இணக்கம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று பிற்பகல் விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், உறுப்பினர்களான சுமந்திரன், ஸ்ரீதரன் , செல்வம் அடைக்கலநாதன் , மாவை சேனாதிராஜா உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இன்று காலை அலரிமாளிகை கலந்துரையாடலின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் பிரதமரிடம் முன்வைத்த எழுத்துமூல ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்கள் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்புடன் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடவே இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இதன்போது பிரதமருடன் முன்னாள் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, ஜி.எல்.பீரிஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வாதார செயற்பாடுகள் துரிதமாக முன்னெடுக்கப்பட வேண்டும், அதேபோல் தமிழர் பகுதிகளின் விசேட தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யவேண்டும்.


குறிப்பாக விவசாயம், பண்ணை வளர்ப்பு உள்ளிட்ட விடயங்களை பலப்படுத்த வேண்டும் என்ற காரணிகளை கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேபோல் நாளாந்த வேலையாட்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான நிவாரண உதவிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற காரணிகளை பிரதமரிடத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேபோல் சுய தொழில் வாய்ப்புகளை பெருக்க அரசாங்கத்திடம் நிதி இல்லையென்றாலும் உள்ளூராட்சி சபைகளில் இடர் முகாமைத்துவ நிதி உள்ளதால் அவற்றை பெற்றுகொடுத்து மக்களுக்கான சுய தொழில்களை, விவசாயத்தை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க முடியும்.


ஆனால் இதில் ஆளுநர்கள் தடையாக இருப்பதாகவும் கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர். எனினும் இந்த விடயத்தில் அரசாங்கமாக நாம் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தயாராக இருந்தாலும் கூட தேர்தல்கள் ஆணைக்குழு இப்போது தடையாக உள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

குறிப்பாக நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தி பொது மன்னிப்பின் பெயரில் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

மிக நீண்டகாலமாக அவர்கள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிலர் 20 ஆண்டுகளுக்கும் மேலான காலமாக சிறைகளில் உள்ளனர். ஆகவே அவர்களுக்கான குறுகியகால தண்டனை வழங்கி அவர்களை விடுதலை செய்ய வேண்டும். கடந்த காலங்களில் அவ்வாறு சிலர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பேரிலும் விடுவிக்கப்படுகின்றனர். எனவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையில் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் கூடிய கவனம் செலுத்த வேண்டுமென சுமந்திரன் எடுத்துக்கூறியுள்ளார்.

இதற்குப் பதில் தெரிவித்த பிரதமர் ,

நீண்ட காலமாக சிலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். எனினும் இவர்களை விடுதலை செய்ய முடியுமா என்பது குறித்த சட்ட முறைமைகள் என்ன என்பது கவனத்தில் கொள்ள நாம் தயராக உள்ளோம். அதேபோல் பொதுமன்னிப்பில் விடுவதென்றால் அது ஜனாதிபதியால் மாத்திரமே முடியும். எனவே அவருடன் இது குறித்து கலந்துரையாடி அவரது நிலைப்பாடு என்னவோ அதனை உங்களுக்கு அறியத்தருகிறேன் என்றுள்ளார்.

இந்நிலையில் கிளிநொச்சி ஆனைவிழுந்தான் குளம் பிரதேசத்தில் 300 ஏக்கர் காணியும் , ஜெயபுரம் பகுதிகளில் 200 ஏக்கர் நிலமும் வனப்பாதுகாப்பு திணைக்களம் தன்வசப்படுத்தி வைத்துள்ளனர்.

இந்த நிலங்களை விடுதலை செய்தால் மக்களின் விவசாய நடவடிக்கைகளுக்கு சாதகமாக அமையும் அதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

இது குறித்தும் உடனடியாக கவனம் செலுத்துவதாகவும் அந்த நிலங்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும், வனப்பாதுகாப்பு அதிகாரிகளுடன் இந்த விடயம் குறித்து பேசுவதாகவும் பிரதமர் வாக்குறுதி கொடுத்துள்ளார்.

Previous Post

மாடு கடத்தலில் ஈடுபட்ட கும்பலை மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

Next Post

இலங்கையில் முப்படை வீரர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி…

Editor

Editor

Related Posts

மகிந்தவின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம்
இலங்கைச் செய்திகள்

மகிந்தவின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம்

December 24, 2025
யானைக்கு தீவைத்த சம்பவம் – சந்தேநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்
இலங்கைச் செய்திகள்

யானைக்கு தீவைத்த சம்பவம் – சந்தேநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்

December 24, 2025
காலி மாநகர சபை வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் அமைதியின்மை
இலங்கைச் செய்திகள்

காலி மாநகர சபை வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் அமைதியின்மை

December 24, 2025
வவுனியாவில் கஞ்சாசெடி வளர்த்த ஒருவர் கைது!
இலங்கைச் செய்திகள்

வவுனியாவில் கஞ்சாசெடி வளர்த்த ஒருவர் கைது!

December 24, 2025
அவுஸ்ரேலியா போன்று இலங்கையிலும் தாக்குதல் :எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்
இலங்கைச் செய்திகள்

அவுஸ்ரேலியா போன்று இலங்கையிலும் தாக்குதல் :எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்

December 23, 2025
பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டத்திற்கான புதிய வரைவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை
இலங்கைச் செய்திகள்

பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டத்திற்கான புதிய வரைவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை

December 23, 2025
Next Post
இலங்கையில் முப்படை வீரர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி…

இலங்கையில் முப்படை வீரர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி...

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
மகிந்தவின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம்

மகிந்தவின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம்

December 24, 2025
யானைக்கு தீவைத்த சம்பவம் – சந்தேநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்

யானைக்கு தீவைத்த சம்பவம் – சந்தேநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்

December 24, 2025
காலி மாநகர சபை வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் அமைதியின்மை

காலி மாநகர சபை வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் அமைதியின்மை

December 24, 2025
வவுனியாவில் கஞ்சாசெடி வளர்த்த ஒருவர் கைது!

வவுனியாவில் கஞ்சாசெடி வளர்த்த ஒருவர் கைது!

December 24, 2025

Recent News

மகிந்தவின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம்

மகிந்தவின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம்

December 24, 2025
யானைக்கு தீவைத்த சம்பவம் – சந்தேநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்

யானைக்கு தீவைத்த சம்பவம் – சந்தேநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்

December 24, 2025
காலி மாநகர சபை வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் அமைதியின்மை

காலி மாநகர சபை வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் அமைதியின்மை

December 24, 2025
வவுனியாவில் கஞ்சாசெடி வளர்த்த ஒருவர் கைது!

வவுனியாவில் கஞ்சாசெடி வளர்த்த ஒருவர் கைது!

December 24, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy