நாடுமுழுவதுமுள்ள சிறைச்சாலைகளில் 228 கைதிகளுக்கு வெசாக் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் சிறுகுற்றங்களுக்கு நீதிமன்றினால் தண்டப்பணம் விதித்து அதனைச் செலுத்த முடியாது தண்டனை அனுபவித்த 5 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டனர்.
அவர்களில் ஒருவருக்கு மற்றொரு வழக்கில் தண்டனைக் காலம் நிறைவடையாததாகல் அந்தக் கைதி மீளவும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் விடுதலை செய்யப்பட்ட கிளிநொச்சியைச் சேர்ந்த மூவர், தற்போதைய ஊரடங்கு நடைமுறையால் சிறைச்சாலை வாகனத்தில் அவர்களத்து சொந்த இடங்களுக்கு கொண்டு சென்று விடப்படவுள்ளனர்.
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 31ன் கீழ் பெரும்குற்றங்களில் ஈடுபடாத கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது.
அதன்படி, சிறு குற்றங்களில் தண்டனை பெற்ற நபர்களுக்கும், 65 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கும், தண்டம் செலுத்த முடியாத கைதிகளுக்கும் ஜனாதிபதி பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.





















