சீனாவில் வூஹான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகள் அனைத்திற்கும் பரவி பல உயிர்களை காவு கொண்டு வருகின்றது.
இதன் தாக்கம் தற்போது இந்தியாவில் மிகத் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. ஆனாலும் சில பகுதிகளில் நோயின் தாக்கத்தினை உணர்ந்து கொள்ளாமல் வெளியில் சுற்றி வருகின்றனர். இவர்களுக்கு தக்க பாடத்தினைக் குறித்த காணொளி வழங்கும் என்பதில் சந்தேகமேயில்லை.
ஆம் இந்தியாவில் சேலம் மாவட்டம் ஜலகண்டபுரம் பகுதியில் 7வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அவனை அழைத்துச் செல்வதற்கு ஆம்புலன்ஸ் வந்துள்ளது. குறித்த சிறுவன் பெற்றோரைப் பிரிந்து தனியாக மருத்துவமனைக்குச் செல்லும் காட்சி அனைவருக்கும் வேதனையை அளித்துள்ளது.
மக்களே குறித்த நோயில் தீவிரத்தை அறியாமல் இன்னும் வெளியில் சுற்றிக்கொண்டும், அலட்சியமாகவும் செயல்படாதீர்கள்… இதுபோன்று லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கின்றனர் என்பதை மனதில் வைத்துள்கொள்ளுங்கள்…