தமிழகத்தில் திருமணமான மூன்று மாதத்தில் புதுமாப்பிள்ளையான இராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த ரெங்கசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேந்திரநாத்.
இவருக்கும் ராதிகா என்ற பெண்ணுக்கும் மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
திருமணத்துக்கு பின்னர் இராணுவ பணிக்காக சுரேந்திரநாத் வேறு ஊருக்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் சென்ற மாதம் விடுமுறைக்கு ஊர் திரும்பிய நிலையில், மனைவியுடன் சுரேந்திரநாத்துக்கு குடும்ப தகராறு ஏற்பட்டது.
இதன் காரணமாக மனைவி ராதிகாவை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட சுரேந்திரநாத், தனது வீட்டு மாடியில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.