நாவலப்பிட்டி – கடியன்லன பிரதேசத்தில் தந்தை ஒருவர் தனது பிள்ளைக்கு மதுபானம் அருந்தக் கொடுத்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளது.
குறித்த தந்தை தனது 5 வயது பிள்ளையுடன் இரவு நேர விருந்து ஒன்றுக்கு சென்றுள்ளார்.
அப்போது பிள்ளைக்கு பியர் கொடுத்து குடிக்கச் செய்து அதை வீடியோ பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியான நிலையில் தற்போது பலரும் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இது குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.