13 போதைப்பொருள் பக்கற்றுகளை விழுங்கிய நபரொருவர் களுபோவிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிலியந்தலை – மாகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான ஒருவரே இவ்வாறு நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
நேற்றுமுன்தினம் பண்டாரகம – பிலியந்தலை வீதியில் தொரணவில சந்தியில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் விசாரணை செய்தபோது, பொலித்தீன் உறைகளில் பொதியிடப்பட்ட போதைப்பொருள் பக்கற்றுகளை தான் விழுங்கியதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அந்நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, உயிரிழந்துள்ளார்.
அதன் பின்னர் நேற்று மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது, உயிரிழந்த நபரின் வயிற்றில் போதைப்பொருட்கள் அடங்கிய 13 பக்கற்றுகள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.