இளவாலை கடற்பரப்பில் கடலில் மிதந்து வந்த நிலையில் 57 கிலோ கஞ்சா கடற் படையினரால் மீட்கப்பட்டு இளவாலை பொலிஸாரிடம் இன்று (12.06.2020) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இளவாலை கடற்பரப்பில் சந்தேகத்துக்கிடமான முறையில் மர்ம பொருட்கள் மிதந்து வந்து உள்ளன. இதனை அவதானித்த கடற்படையினர் குறித்த மூட்டைகளை சோதனையிட்டுள்ளனர்.
அப்போது அதற்குள் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மீட்கப்பட்ட கஞ்சா மூட்டைகள் இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட மூட்டைகளில் இருந்து 57 கிலோ எடையுள்ள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.