கடந்த சில நாட்களாகவே இந்தியா- சீனா எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.
இந்தியாவில் மட்டும் 20க்கும் மேற்பட்ட வீரர்கள் வீர மரணம் அடைந்த நிலையில், பலரும் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் சீன தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை சாக்ஷி அகர்வால் இன்று தனது டிக்டாக் கணக்கிலிருந்து தன்னை விலக்கி கொண்டுள்ளார். டிக்டாக்கில் அவரை 2.18 லட்சம் பேர் பின்பற்றியிருந்தனர்.
இதுகுறித்து கூறுகையில், பொறுமைக்கும் அமைதிக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவது நம் நாடு. ஆனால் சீனா அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி நம் நிலத்தை அபகரிக்க பார்க்கிறது.
எனவே நான் இனிமேல் சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை உபயோகப்படுத்த போவதில்லை என்றும், சீன தயாரிப்புகளின் விளம்பரங்களில் நடிப்பது இல்லை என்றும் முடிவு செய்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் இதன் தொடக்கமாக டிக்டாக்கிலிருந்து விலகியுள்ளதாகவும், இந்தியாவின் கண்ணியத்தை காக்க ஒரு குடிமகளாக எதையும் செய்ய தயங்கமாட்டேன் என தெரிவித்துள்ளார்.



















