வாகன திருத்துமிடத்தில் நிறுத்திவைக்கபட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.
வவுனியா கற்குளம் பகுதியில் உள்ள வாகன திருத்துமிடம் ஒன்றில் நிறுத்திவைக்கபட்டிருந்த 6 மோட்டார் சைக்கிள்கள் இனந்தெரியாத விசமிகளால் இன்று அதிகாலை எரியூட்டப்பட்டுள்ளது.
குறித்த வாகன திருத்துமிடம் மூடப்பட்டிருந்த நிலையில் இன்றயதினம் அதிகாலை அங்கு சென்ற இனம் தெரியாத நபர்கள் பழுது பார்பதற்காக நிறுத்திவைக்கபட்டிருந்த 6 மோட்டார் வண்டிகளை தீயிட்டு எரித்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக வாகன திருத்துமிடத்தின் உரிமையாளருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்ட நிலையில், அவரால் சிதம்பரபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது.
முறைப்பாட்டிற்கமைய வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.



















