ஒல்லியான தேகம் கொண்டவர்கள் உடல் எடையை அதிகரிக்க, உணவே மருந்தாக செயல்படும் மருத்துவ முறையை பின்பற்றினாலே போதும்.
இயற்கையான முறையில், எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் உடல் எடையை எப்படி அதிகரிக்கலாம் என்று பார்ப்போம்
- உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்னர், ஒரு தேக்கரண்டி சுத்திகரிக்கப்பட்ட வெண்ணை மற்றும் சம அளவு சர்க்கரை சேர்ந்த கலவையை ஒரு மாதத்திற்கு சாப்பிட்டு வந்தால், உடல் எடை மாற்றம் ஏற்படும்.
- மதிய வேளைகளில் சுமார் 45 நிமிடங்கள் முதல் ஒரு மணிநேரத்திற்கு குட்டித்தூக்கம் தூங்க வேண்டும். இதன்மூலம், உடல் எடை அதிகரிப்பது மட்டுமின்றி, இரவில் நிம்மதியான தூக்கத்தையும் வரவழைத்து விடும்.
- ஒரு மாம்பழத்தை ஒரு நாளைக்கு மூன்று முறை சாப்பிட வேண்டும். மாம்பழத்தை சாப்பிட்டவுடன், ஒரு தம்ளர் சூடான பால் குடிக்க வேண்டும்.
- உலர்ந்த அத்திப்பழம் மற்றும் திராட்சை ஆகியவை கலோரிகளை வழங்கும் பழங்களாகும், 6 உலர்ந்த அத்தி மற்றும் சுமார் 30 கிராம் உலர்ந்த திராட்சையை இரவில் தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் அவற்றை இரண்டு பகுதிகளாக சாப்பிடணும்.
- வாழைப்பழங்கள் கலோரிகளால் நிரம்பியுள்ளது. எனவே, தினமும் காலையில் ஒரு வாழைப்பழத்தைச் சாப்பிட்டுவிட்டு, அதனுடன் ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்த மிதமான சூட்டில் பால் அருந்தினால் உடல் எடை கூடும்.
- வேர்க்கடலை வெண்ணெய் அதிக கலோரிகளைக் கொண்டது என்பதால், இதனை ரொட்டி அல்லது பேக்கல் மீது பயன்படுத்தினால், உடல் எடை வேகமாக அதிகரிக்கும்.
- கார்போஹைட்ரேட்டுகள் உருளைக்கிழங்குகளில் நிரம்பியுள்ளதால், இதுவும் உடல் எடையை அதிகரிக்கும். இதனை கிரில் செய்து அல்லது பிரஞ்ச் பிரையாக சாப்பிடலாம். பிரஞ்ச் பிரையாக சாப்பிட நினைத்தால், நுகர்வை ஒரு வாரத்திற்கு இரண்டு முறை என கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
- பாதாம், அக்ரூட் பருப்புகள், சூரியகாந்தி விதைகள் மற்றும் ஆலி விதைகள் ஆகியவற்றில் கலோரிகள் நிறைந்துள்ளது. எனவே, இவற்றை உணவுடன் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- அதேபோல பெரும்பாலான நட்ஸ் சுவை, ஊட்டச்சத்து மற்றும் எடை அதிகரிப்பு ஆகியவற்றை உண்டாக்க உதவி செய்யும். எனினும் தொடர்ந்து சாப்பிடக் கூடாது.
- பாதாம் பால் உடல் எடையை கூட்ட உதவும் மற்றொரு உணவாகும், பாதாமுடன், உலர்ந்த அத்திப்பழம் மற்றும் பேரீச்சையை சேர்த்து பாலை கொதிக்க வைக்க வேண்டும். ஒரு மாதம் வரை, ஒவ்வொரு நாளும் ஒரு வேளைக்கு இந்தப் பாலை அருந்த வேண்டும்.
- மேலும், வேக வைத்த பாதாம், அத்திப்பழம் மற்றும் பேரீச்சையை எறியாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன்மூலம் உடல் எடை அதிகரிக்கும்.
- மன அழுத்தத்தை போக்க யோகா அல்லது மூச்சுப் பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்ளலாம். மன அழுத்தம் குறைந்தாலே உடல் எடை கூடும்.