திருமணமான 4 நாட்களில் கணவன் மற்றும் மனைவி அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தை கசியாபத்தை சேர்ந்தவர் விஷால். இவரும் நிஷா என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்தனர்.
ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் காதலை இரு குடும்பத்தாரும் ஏற்கவில்லை.
பின்னர் தொடர் பேச்சுவார்த்தையால் இரு குடும்பத்தாரும் திருமணத்துக்கு சம்மதித்தனர். இதையடுத்து நான்கு நாட்களுக்கு முன்னர் விஷால் – நிஷா திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னர் தம்பதி மகிழ்ச்சியுடன் இருந்தார்கள்.
இந்த நிலையில் பணிக்கு செல்வதாக கூறிவிட்டு நேற்று முன் தினம் விஷால் வெளியில் சென்ற நிலையில் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் பதறிபோன குடும்பத்தார் அவரை தேடினார்கள். அப்போது அங்குள்ள இரயில் தண்டவாளத்தில் விஷால் சடலமாக கிடந்தார்.
இதையடுத்து அவரின் சடலத்தை பொலிசார் மீட்டனர்.
இந்த சோகம் அடங்குவதற்குள் நிஷா நேற்று காலை தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து இரு குடும்பத்தாரிடமும் பொலிசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
திருமணமான நான்கு நாட்களில் புதுமணத்தம்பதி அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



















