இயக்கச்சி படைமுகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த, வெளிநாட்டில் இருந்து அழைத்து வரப்பட்ட 71 பெண்கள் தமது வீடுகளிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டில் பணிப் பெண்களாக கடமையாற்றியவர்கள் கடந்த 27ஆம் திகதி நாட்டிற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.
இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்கள் இயக்கச்சி 55 வது படைப்பிரிவில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் கடந்த 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் அவர்கள் தமது தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து இன்றையதினம் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்களை யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி ருவான் வணிகசூரிய இவர்களுக்கான மருத்துவ சான்றிதழ்களை வழங்கி அனுப்பி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


















