கன்னியாகுமரியில் கொரோனவால் பாதிக்கப்பட்ட ஒருவர் அருகில் உள்ள அரச மருத்துவமனையின் அருகே அமைந்துள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
அவர் அடிக்கடி பரோட்டா சாப்பிடும் பழக்கம் கொண்டவராக தெரிகிறது.
இதன் காரணமாக, கொரோனா முகாமில் இருந்த அந்த நபர், பரோட்டா வாங்க வேண்டி சுவரேறி குதித்து, ஹோட்டலுக்கு சென்று பரோட்டா வாங்கி விட்டு மீண்டும் முகாமிற்கு திரும்பியுள்ளார்.
இதனை சிசிடிவி மூலம் மருத்துவர்கள் கண்டறிந்த நிலையில், மருத்துவர்கள் அவரை கண்டித்துள்ளனர்.
தொடர்ந்து, அந்த ஹோட்டலில் அவருடன் இருந்தவர்கள் யார் என்பது தொடர்பாக விசாரித்து வருகின்றனர். மற்றவர்களுக்கு தொற்று பரவும் என அரசு அறிவுறுத்தி வரும் நிலையிலும், மக்கள் எந்தவித விழிப்புணர்வும் இல்லாமல் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.



















