இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை 2703 ஆக உயர்ந்துள்ளது. இன்று மாத்திரம் இரவு 10.30 மணி வரை 6 தொற்றாளிகள் இனங்காணப்பட்டனர்.
இதில் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தின் தொற்றாளிகளுடன் நெருங்கிய 5 பேர் அடங்குகின்றனர். மற்றும் ஒருவர் பிலிப்பைன்ஸில் இருந்து இலங்கைக்கு வந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதுவரை வைத்தியசாலைகளில் 669 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். 2023 பேர் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர்.