வடமராட்சி குடத்தனையில் மணல்க் கடத்தலை தடுக்க நடுக் குடத்தனைப் பகுதியில் STF காவல் முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
குடத்தனை பெண்கள் கிராம அபிவிருத்திச் சங்க கட்டடத்தை, அவ் அமைப்பின் அனுமதி பெறப்படாமல் அதனை மருதங்கேணி பிரதேச செயலர் தாரை வார்த்துள்ளார்.
முகாமுக்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முகாம் ஆரம்ப பணிகள் இடம்பெற்றுவரும் அதே வேளை… எதை தடுக்க முகாம் இடுகிறார்களோ அதனை, அதாவது மணலை அவர்களை பக்கோ மூலம் அகழ்ந்து டிப்பர்களில் கடத்தும் STF.
இந்த மணலைப் பாதுகாக்க இப்பகுதி மக்கள், இளைஞர்கள் பெரும் பிரயத்தனப்பட்டு வருகிறார்கள், இப் பகுதியில் மணல் கடத்தல் இடம்பெறுவதாக கூறி பாதுகாக்க வந்தவர்கள் மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளமையானது, அப்பகுதி மக்களின் மனங்களில் பெரும் அச்சத்திலும், விசனத்திலும் ஆழ்த்தியுள்ளது.
இதேவேளை இவர்கள் மணல் கடத்தலை தடுக்க வந்தார்களா?? மணலைக் கொள்ளையடிக்க வந்தார்களா என அப் பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.



















