லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் குறைந்தது 78 பேர் கொல்லப்பட்டதாகவும், 4,000 பேர் காயமடைந்ததாகவும் லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று செவ்வாயன்று ஏற்பட்ட இந்த வெடி விபத்தால் தலைநகரம் குலுங்கியதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
“இப்போது வரை பலர் காணவில்லை. மக்கள் தங்களது அன்புக்குரியவர்களைப் பற்றி அவசர சிகிச்சைப் பிரிவைக் கேட்கிறார்கள், மின்சாரம் இல்லாததால் இரவில் தேடுவது கடினம் ”என்று அந்த நாட்டின் சுகாதாரஅமைச்சர் ஹமாத் ஹசன் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
“நாங்கள் ஒரு உண்மையான பேரழிவை எதிர்கொள்கிறோம், சேதங்களின் அளவை மதிப்பிடுவதற்கு நேரம் தேவை.”
பெய்ரூட் குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 70 க்கும் அதிகமாக உள்ளது என்று சுகாதார அமைச்சர் கூறுகிறார்

வெடிப்புக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. ஆறு ஆண்டுகளாக துறைமுகத்தில் ஒரு கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,700 தொன் பறிமுதல் செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட்டே வெடிவிபத்தின் காரணம் என கூறப்படுகிறது.
வெடிப்பைத் தொடர்ந்து லெபனான் ஜனாதிபதி மைக்கேல் அவுன் நாட்டின் உயர் பாதுகாப்பு கவுன்சிலை கூட்டினார்.
Good God! What happened in Beirut?!
Pls pray for those in Beirut who’ll be faced today with loss of life, health & home.Btw,I find it disturbing that this happened so close to 75th remembrance of Hiroshima
(no conspiracy theory here,I’m just observing).pic.twitter.com/K4SlByZdaJ— Obianuju Ekeocha (@obianuju) August 4, 2020
நிலநடுக்கம் ஏற்பட்டதாக தாம் நினைத்ததாக தலைநகர் மக்கள் தெரிவித்தனர். கட்டடங்கள் இடிந்த விழுந்தன, ஜன்னல்கள் உடைந்தன, மக்கள் செய்வதறியாது வீதிகளில் நின்று கதறியழுததாக ரொய்ட்டர்ஸ் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
https://twitter.com/borzou/status/1290675854767513600
ட்ரம்ப்
பெய்ரூட்டை உலுக்கிய மிகப்பெரிய வெடிப்பு “பயங்கர தாக்குதல்” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறினார்.
“லெபனான் மக்களுடன் எங்களுக்கு நல்ல உறவு உள்ளது, நாங்கள் உதவ அங்கு இருப்போம். இது ஒரு பயங்கரமான தாக்குதல் போல் தெரிகிறது” என்று டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கூறினார்.
“நான் எங்கள் சில பெரிய தளபதிகளைச் சந்தித்தேன், இது ஒரு வெடிப்பு வகை அல்ல என்று அவர்கள் உணர்கிறார்கள். இது ஒரு தாக்குதல் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இது ஒருவித குண்டு” என்றார்.
ஐ.நா அமைதிப்படையினருக்கும் பாதிப்பு
லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் (யுனிஃபில்), துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட அதன் கப்பல்களில் ஒன்று வெடிப்பில் சேதமடைந்துள்ளதாகவும், அதன் பல பணியாளர்கள் காயமடைந்ததாகவும், சிலர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்றும் அதன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

காயமடைந்த அமைதி காக்கும் படையினரை அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வதாகவும், அதன் பணியாளர்கள் மீதான தாக்கத்தின் அளவு உட்பட நிலைமையை மதிப்பிடுவதாகவும் யுனிஃபில் தெரிவித்துள்ளது.

இந்த கடினமான நேரத்தில் நாங்கள் மக்களுடனும் லெபனான் அரசாங்கத்துடனும் இருக்கிறோம், எந்தவொரு உதவிகளையும் ஆதரவையும் வழங்கவும் உதவவும் தயாராக இருக்கிறோம்” என்று யுனிஃபில் பணித் தலைவரும் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டெல் கோல் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



















