• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் உலகச் செய்திகள்

அமெரிக்க விசாவில் திடீர் சலுகை!

Editor by Editor
August 15, 2020
in உலகச் செய்திகள்
0
அமெரிக்க விசாவில் திடீர் சலுகை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவில் தங்கி இருந்து, அந்த நாட்டின் நிறுவனங்களில் வேலை பார்ப்பதற்காக இந்தியர்கள், சீனர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கு எச்1-பி, எல்-1, ஜே-1 விசாக்களை அந்த நாடு வழங்கி வருகிறது. எச்-1பி விசா தகவல் தொழில் நுட்பத்துறையினருக்கு வழங்கப்படுகிறது.

இந்த விசா 3 ஆண்டு முதல் 6 ஆண்டுகள் வரை அமெரிக்காவில் தங்கி வேலை பார்க்க வகை செய்கிறது எல்-1 விசாவின் கீழ் 7 ஆண்டுகள் வரை அமெரிக்காவில் தங்கி வேலை பார்க்க முடியும். ஜே-1 விசா, பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கானது.

இந்த நிலையில், உலகின் வேறு எந்த நாட்டையும் விட அமெரிக்காவை கொரோனா வைரஸ் தொற்று மிக மோசமாக பாதித்துள்ளது. தொற்று பரவலை தடுப்பதற்காக பல மாகாணங்களிலும் ஊரடங்கு போடப்பட்டது. இதன் காரணமாக அந்த நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்தது. தொழில் நிறுவனங்கள் மூடலால் லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்புகளை இழந்தனர்.

இதையடுத்து, கடந்த ஜூன் 22-ந் தேதி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அதிரடியாக அமெரிக்க விசாக்கள் மீது தடை விதித்து உத்தரவிட்டார். அமெரிக்க மக்களுக்கான வேலைவாய்ப்புகளில் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் விதத்திலும், வெளிநாட்டினருக்கு அமெரிக்காவில் வேலை கிடைப்பதை குறைக்கும் விதத்திலும் எச்-1பி உள்ளிட்ட அமெரிக்க விசாக்கள் மீது இந்த ஆண்டு இறுதிவரை தடை விதித்து அந்த உத்தரவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எச்-1பி விசாக்கள் மூலம் அமெரிக்காவில் அதிகளவில் வேலைவாய்ப்புகளை பெற்று வந்தவர்கள் இந்தியர்களும், சீனர்களும்தான். இந்த நிலையில் டிரம்பின் இந்த உத்தரவு சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த உத்தரவுக்கு எதிராக அமெரிக்க கோர்ட்டில் வழக்குகளும் போடப்பட்டன.

இதற்கிடையே கடந்த சில வாரங்களாக எச்-1பி, எல்-1 மற்றும் ஜே-1 விசாக்கள் மீதான பயண தடையில் இருந்து சுகாதார துறையினருக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோவுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் பலரும் கோரிக்கை விடுத்து கடிதங்கள் எழுதினர்.

இந்தநிலையில், தகவல் தொழில்நுட்ப துறையினரும், சுகாதாரத்துறை பணியாளர்களும் பலன்பெறத்தக்க விதத்தில், டிரம்ப் நிர்வாகம் நேற்று முன்தினம் திடீரென ஒரு அதிரடி சலுகையை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை பிறப்பித்துள்ள உத்தரவில், “அமெரிக்காவில் தொடர்ந்து வேலைவாய்ப்பினை மீண்டும் பெற முற்படும் ஊழியர்களுக்கு எச்-1பி மற்றும் எல்-1 விசாக்கள் மீண்டும் வழங்கலாம். ஆனால் அவர்கள் ஊரடங்குக்கு முன்னர் எந்த நிறுவனத்தில் பணியாற்றினார்களோ அதே நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

சுகாதார துறையில் பணி புரிந்தவர்கள் குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிரான களப்பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், கணிசமான பொது சுகாதார நன்மை உள்ள பகுதிகளில் (புற்றுநோய் மற்றும் தொற்றுநோய் ஆராய்ச்சி) தொடர்ந்து மருத்துவ ஆராய்ச்சி நடத்த விரும்புவோருக்கும் விசா தடையில் இருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எச்-1பி, எல்-1 மற்றும் சில வகை ஜே 1 விசாக்களில், விசாதாரர்களின் (கணவன், மனைவி, குழந்தைகள் உள்ளிட்ட) குடும்ப உறுப்பினர்களும் அமெரிக்கா வர சலுகை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகைகளால் இந்தியர்கள் பெருமளவில் பலன் அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் நவம்பர் 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், பெருவாரியாக உள்ள இந்தியர்களின் ஆதரவை பெறும் வகையில் இந்த விசா சலுகைகளை டிரம்ப் நிர்வாகம் வழங்கியுள்ளதாக சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர்.

Previous Post

தமிழர்கள் பகுதி கடையொன்றில் கொள்ளையடிக்கப்பட்டுள்ள எட்டுக்கோடி ரூபா பெறுமதியான நகைகள்

Next Post

சவாலை முறியடித்த பின்னர் முடிவைப்பெறுவதற்கு சிறிது நேரம் அமைதியாக காத்திருக்க வேண்டியது அவசியம் – முன்னாள் ஜனாதிபதி

Editor

Editor

Related Posts

இலங்கைக்குள் நுழையும் UAEஇன் விசேட குழு.. அபுதாபியில் இருந்து அநுரவுக்கு வந்த செய்தி!
உலகச் செய்திகள்

இலங்கைக்குள் நுழையும் UAEஇன் விசேட குழு.. அபுதாபியில் இருந்து அநுரவுக்கு வந்த செய்தி!

December 20, 2025
துப்பாக்கிச் சூட்டை அடுத்து அவுஸ்திரேலியாவில் கடுமையாகும் சட்டங்கள்!
உலகச் செய்திகள்

துப்பாக்கிச் சூட்டை அடுத்து அவுஸ்திரேலியாவில் கடுமையாகும் சட்டங்கள்!

December 15, 2025
உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்
உலகச் செய்திகள்

உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்

December 6, 2025
விமான தாக்குதல் எதிரொலி : பாகிஸ்தான் -ஆப்கான் இடையே மீண்டும் போர் பதற்றம்
உலகச் செய்திகள்

விமான தாக்குதல் எதிரொலி : பாகிஸ்தான் -ஆப்கான் இடையே மீண்டும் போர் பதற்றம்

November 25, 2025
இலங்கையை இலக்கு வைக்கும் தாவுத் இப்ராஹிம்!
உலகச் செய்திகள்

இலங்கையை இலக்கு வைக்கும் தாவுத் இப்ராஹிம்!

November 9, 2025
ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!
உலகச் செய்திகள்

ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

November 3, 2025
Next Post
சவாலை முறியடித்த பின்னர் முடிவைப்பெறுவதற்கு சிறிது நேரம் அமைதியாக காத்திருக்க வேண்டியது அவசியம் – முன்னாள் ஜனாதிபதி

சவாலை முறியடித்த பின்னர் முடிவைப்பெறுவதற்கு சிறிது நேரம் அமைதியாக காத்திருக்க வேண்டியது அவசியம் - முன்னாள் ஜனாதிபதி

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்

கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்

December 22, 2025
வவுனியாவில் வாள்வெட்டு! இளைஞர் ஒருவர் பலி

வவுனியாவில் வாள்வெட்டு! இளைஞர் ஒருவர் பலி

December 22, 2025
யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம் – அதிகாரிகளுக்கு பிரதமர் அழுத்தம்

யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம் – அதிகாரிகளுக்கு பிரதமர் அழுத்தம்

December 22, 2025
தையிட்டி விகாரைக்கு முன் நல்லூர் கோயிலை உடையுங்கள்! சர்ச்சையை கிளப்பிய அர்ச்சுனா

தையிட்டி விகாரைக்கு முன் நல்லூர் கோயிலை உடையுங்கள்! சர்ச்சையை கிளப்பிய அர்ச்சுனா

December 22, 2025

Recent News

கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்

கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்

December 22, 2025
வவுனியாவில் வாள்வெட்டு! இளைஞர் ஒருவர் பலி

வவுனியாவில் வாள்வெட்டு! இளைஞர் ஒருவர் பலி

December 22, 2025
யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம் – அதிகாரிகளுக்கு பிரதமர் அழுத்தம்

யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம் – அதிகாரிகளுக்கு பிரதமர் அழுத்தம்

December 22, 2025
தையிட்டி விகாரைக்கு முன் நல்லூர் கோயிலை உடையுங்கள்! சர்ச்சையை கிளப்பிய அர்ச்சுனா

தையிட்டி விகாரைக்கு முன் நல்லூர் கோயிலை உடையுங்கள்! சர்ச்சையை கிளப்பிய அர்ச்சுனா

December 22, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy