இந்திய அணியின் கூல் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ஓய்வு குறித்த அறிவிப்புக்கும், அவர் செய்த சாதனைகளை வாழ்த்தியும் பிரதமர் மோடி தோனிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில்,
1. காந்த ஆகஸ்ட் 15ம் தேதி உங்களுக்கே உரித்தான பாணியில், ஒரு வீடியோ வெளியிட்டு ஓய்வை அறிவித்தது, ஒட்டுமொத்த இந்தியர்களின் பேசுபொருளாக மாறியது. 130கோடி மக்களும் இதனால் கவலை அடைந்தாலும், கடந்த 15 ஆண்டுகள் நீங்கள் நிகழ்த்திய சாதனைகளுக்காக அவர்கள் அனைவரும் உங்களுக்கு நன்றி கடன் பட்டுள்ளார்கள்.
2. உங்கள் கிரிக்கெட் வாழ்க்கையில் புள்ளி விவரங்களின் அடிப்படையில் உங்களை நோக்கினால் அது மிகவும் குறைவான புரிதலாகவே இருக்கும். வெற்றிகரமான கேப்டன்களுள் நீங்களும் ஒருவர், சிறந்த பேட்ஸ் மேன்களுக்கான வரலாற்றில் உங்கள் பெயர் முக்கியமான இடத்தில் இருக்கும், அதிலும் நீங்கள் மிகச் சிறந்த விக்கெட் கீப்பரும் கூட.
3. கடினமான சூழலில் அணியை வழி நடத்திய விதமும், குறிப்பாக 2011ம் ஆண்டு உலக கோப்பை இறுதி போட்டியை உங்களுக்கே உரித்தான ஸ்டைலில் முடித்து வெற்றி தேடி தந்ததும், தலைமுறைகள் கடந்தாலும் மக்களால் மறக்க முடியாது.
4. மகேந்திர சிங் தோனி என்ற பெயர் வெறும் கிரிக்கெட்டில் பெற்ற வெற்றிகளுக்காகவும், சாதனைகளுக்காக்வும் மட்டும் நினைவு கூறப்படாது, மாறாக நீங்கள் ஏற்படுத்திய தாக்கம் என்பது மிகவும் தனித்துவமானது.
5. மிகவும் சாதரண பின்னணியில் இருந்து வந்து, இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் சாத்தித்துள்ளீர்கள், சாதாரண சிறிய நகரத்தில் இருந்து வந்த நீங்கள் இந்தியாவை சர்வதேச அளவில் பெருமைபட வைத்துள்ளீர்கள்.
6. உங்களின் வளர்ச்சியும், நன்னடத்தையும் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு தூண்டுகோலாக உள்ளது.
7. எங்கே செல்ல இருக்கிறோம் என்பது தெரிந்திருந்தால் நாம் எங்கிருந்து வருகிறோம் என்பது முக்கியமல்ல – இந்த வாஞ்சையைதான் பல இளைஞர்களின் இதயத்தில் விதைத்துள்ளீர்கள்.
8. நீங்கள் மைதானத்தில் சாதித்த மறக்க முடியாத தருணங்கள் இந்த தலைமுறை இந்தியர்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது; மேலும் இவர்கள் கடினமான சூழல்களிலும் ஒருவருக்கொருவர் உதவி செய்ய தயங்க மாட்டார்கள், அதனை உங்களிடமே இருந்தே கற்றுக்கொண்டார்கள். 2007ம் ஆண்டு டி20 உலககோப்பையில் நீங்கள் பெற்று தந்த வெற்றியே அதற்கு சான்றாக விளங்குகிறது.
9. சாக்ஷியும், ஸிவாவும் இனி உங்களோடு அதிக நேரம் செலவிடுவார்கள் என்று நம்புகிறேன், அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் தியாகமும் ஆதரவும் இல்லாமல் இதெல்லாம் சாத்தியமாகியிருக்காது.
10. நமது இளைஞர்களும் தனிப்பட்ட வாழ்க்கையும், தொழிலையும் எப்படி கையாள வேண்டும் என்பதையும் உங்களிடம் இருந்து கற்றுக்கொள்வார்கள்.
11. ஒரு குறிப்பிட்ட ஆட்டத் தொடரில் வெற்றி பெற்ற பிறகும் அதனை கொண்டாடாமல் உங்கள் மகளோடு ஓடி பிடித்து விளையாடிக் கொண்டிருந்ததை ஒரு புகைப்படத்தில் பார்த்தேன், அது ஒரு சரித்திர புகைப்படமாக திகழ்கிறது.
உங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு எனது வாழ்த்துகள்!



















