இந்த ஆண்டு டுபாயில் நடைபெறவுள்ள 13வது இந்தியன் பிரீமியர் லீக்கில் பங்கேற்க இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் மகேல ஜெயவர்தன இன்று (21) ஐக்கிய அரபு அமீரகத்திற்கு புறப்பட்டார்.
ஐ.பி.எல்லின் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸுக்கு மஹேல பயிற்சியாளராக இருக்கிறார். மஹேல ஜெயவர்தனாவின் கீழ் மும்பை இந்தியன்ஸ் 3 தொடர்களில் ஆடி, இரண்டு முறை ஐபிஎல் சாம்பியன்ஷிப்பை வென்றது.
இதற்கிடையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான முத்தையா முரளிதரன் செப்டம்பர் 4 ஆம்திகதி யுஏஇக்கு புறப்படுவார்.
ஐபிஎல் செப்டம்பர் 19 ஆம் திகதி தொடங்கி நவம்பர் 08 ஆம் திகதியுடன் முடிவடையும்.