வவுனியாவிலிருந்து செட்டிக்குளம் செல்லும் அரச பேருந்தில் பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகி வருவதாக பயணிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
வவுனியாவிலிருந்து பூவரசங்குளம் ஊடாக செட்டிக்குளம் மெனிக்பாம் நோக்கி இரவு 8.00 மணிக்கு பயணிக்கும் இ.போ.ச பேருந்திலேயே மேற்படி சம்பவம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக பயணிகள் தெரிவித்ததாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வவுனியாவிலிருந்து புறப்படும் பேருந்தில் பயணிக்கும் சிலர், பேருந்தில் வைத்து மது அருந்தி வருவதுடன், பேருந்தில் பயணம் செய்யும் பெண்களுடன் பாலியல் சேட்டை விடுவதாவும் இச் செயற்பாட்டை சாரதி மற்றும் நடத்துனர் கண்டுகொள்வதில்லை என பயணிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
வவுனியா இலுப்பையடி சந்தியிலிருந்து இரவு புறப்படும் குறித்த பேருந்து பூவரசங்குளம் எட்டாம் கட்டையில் அமைந்துள்ள மதுபானசாலைக்கு முன்பாக நிறுத்தப்படுகிறது.
இவ்வாறு குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர்கள் குறித்த சமூகவிரோத கும்பலுக்கு ஆதரவாக செயற்படுவதாக பாதிக்கப்பட்ட பயணிகள் தெரிவிக்கின்றனர்.
இச் சம்பவம் தொடர்பாக பூவரசங்குளம் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் பொலிசார் நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை என்பதுடன் வடபிராந்திய போக்குவரத்து அமைச்சிற்கும் இச்சம்பவம் தொடர்பாக தெரிவிக்கபப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.