தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயமே.
தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் எங்கும் வெளியே செல்ல முடியாததால் வீட்டிலையே முடங்கி உள்ளனர்.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் தங்களின் திருமணம் குறித்து பதிலளித்துள்ளார் விக்னேஷ் சிவன்.
அதில் எங்களுக்கு லவ் எப்போது போர் அடிக்கிறதோ? அப்போது நாங்கள் திருமணம் செய்து கொள்வோம் எனத் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.