புதிய பாராளுமன்றக் குழுவே கூட்டமைப்பின் புதிய பேச்சாளரைத் தீர்மானிக்குமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
புதிய பாராளுமன்ற குழு கூடியே ஊடகப் பேச்சாளரை தெரிவு செய்யும். பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் ஊடகப் பேச்சாளர் பதவியும் செயலற்றதாகி விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரை நீக்குவது பற்றி தலைமைக்கு எந்த தீர்மானமும் எடுக்க முடியாது, புதிய பாராளுமன்றக் குழு கூடும் போதே இத்தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்ற கூட்டத்தின்போது கலந்துரையாடல் மாத்திரமே நடைபெற்றதாகவும், எந்த தீர்மானமும் எடுக்கவில்லையெனவும் இரா. சம்பந்தன் மேலும் கூறினார்.
கடந்த பாராளுமன்றத்தில், பாராளுமன்றக் குழு இருந்தது, அதில் 14 உறுப்பினர்கள் இருந்தனர். அதில் சிலர் பாராளுமன்றத்திற்கு வரவில்லை சிலர் புது உறுப்பினர்களாக வந்துள்ளனர்.
புதிய பாராளுமன்றக் குழு கூட வேண்டும் இதனைத் தொடர்ந்துதான் தீர்மானிக்கப்படும்.