யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைப்பு தேடுதல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நேற்று இந்த சுற்றி வளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்தார்கள்.
இதில் யாழ்ப்பாணம் நாவாந்துறை பொம்மைவெளி பகுதியில் யானைத் தந்தம் வைத்திருந்த நபர் உட்பட 19 பேரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்போது, யானைத் தந்தம் வைத்திருந்த ஒருவர், ஹெரோயின் வைத்திருந்த 2 பேர், வாள் வைத்திருந்த 1 நபர், சந்தேகத்தின் பேரில் 10 பேர், நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 5 பேர் உட்பட 19 நபர்களைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். விசாரணையின் பின்னர், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
சுமார் 2 மணித்தியாலயத்திற்கு மேலாக இந்த சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.