மட்டக்களப்பு – மண்முனைப்பற்று தாழங்குடா பகுதியில் நேற்று இரவு இடம் பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பஸ் மோட்டார் சைக்கிளுடன் மோதியமையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. .
இந்த விபத்தில் புதுக் குடியிருப்பைச் சேர்ந்த இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
விபத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டது. பொதுமக்களினால் பஸ் தாக்கப்பட்டதுடன் பஸ் சாரதியும் நடத்துநரும் தப்பிச்சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
உயிரிழந்தவர்கள் புதுக்குடியிருப்பு கந்தசாமி ஆலய வீதியைச் சேர்ந்த துலக்ஸன் (வயது – 24) மற்றும் நிலுக்சன் (வயது20) என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.