பெண்ணொருவரின் கையை பிடித்த சந்தேக நபரொருவரை அடுத்த மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலாகுமாரி ரத்னாயக்க இன்று (29) உத்தரவிட்டார்.
இச்சம்பவம் சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சீனக்குடா பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் தமது அயல் வீட்டு யுவதி ஒருவரின் கையை பிடித்து இழுப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்து பொலிசார் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.