முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் இரண்டு பேருக்கு விதிக்கப்பட்ட பயணத் தடைiய கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று நீடித்தது.
மூன்று நபர்களுக்கு புதிய கடவுச்சீட்டுக்களை வழங்குவதைத் தவிர்க்கவும் குடிவரவு கட்டுப்பாட்டாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
2016 ஆம் ஆண்டில் ராஜகிரியவில் நடந்த வாகன விபத்து தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
அத்துடன், சம்பிக்க ரணவக்கவின் சாரதி துசித குமாரவை கைது செய்ய பிடியாணை பிறப்பித்தது.