மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டோனிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது மகளுக்கு பலாத்கார மிரட்டல் விடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது.
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
6 போட்டிகளிலும் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக மோசமாக விளையாடியது.
குறிப்பாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டோனியின் ஆட்டம் சரியாக அமையவில்லை. இதனால் கோபம் அடைந்த ரசிகர்களில் பலர் எல்லைத் தாண்டியுள்ளனர்.
டோனியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஸ்கீரின்சாட் எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பரவ விட்டுள்ளனர்.
அதற்கு வரும் கருத்துகள் மிகவும் மோசமாகவும், கொடூரமாகவும் உள்ளன. அதில் இரண்டு பேர் எல்லையை மீறி கருத்து தெரிவித்துள்ளனர்.
யாரும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு டோனி மகள் ஜிவாவுக்கு பலாத்கார மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு பல தரப்பினரும் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.