திருகோணமலை மாவட்டத்தின் அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற பிரபல ஊடகம் ஒன்றின் ஊடகவியலாளர் தாக்கப்பட்டு புகைப்பட கருவிகள் அபகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் இன்று அக்போபுர சீனிஆலை பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அக்போபுர பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளதை அறிந்து செய்தி சேகரிக்கச் சென்ற போது அப்பகுதி இளைஞர்கள் சிலர் ஊடகவியலாளரை தாக்கி ஒலிப்பதிவு கமராவை பறித்துச் சென்றுள்ளதாக ஊடகவியலாளரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு தாக்கப்பட்ட ஊடகவியலாளர் கந்தளாய் யூசூப் என்பவரே என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.