கொழும்பு வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார சுகாதார அமைச்சின் ஊடகப்பேச்சாளராக நேற்று நியமிக்கப்பட்டிருந்தார்.
இதையடுத்து சுகாதார ஊக்குவிப்பு பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
இதில் நாட்டை மூடுவதற்கு ஏதேனும் திட்டங்கள் உள்ளதா என்று சுகாதார அமைச்சின் ஊடக ஊடகப்பேச்சாளரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர்,
“இதுபோன்ற எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை” என்று கூறினார்.
மேலும், பொது போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தும் மக்கள் ஆபத்து இருந்தபோதிலும் சுகாதார நடவடிக்கைகளை முறையாக பின்பற்றவில்லை என்று கூறியுள்ளார்.