பிரித்தானியாவிலிருந்த கொண்டு வரப்பட்ட 242 கழிவு கொள்கலன்களை மீண்டும் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபைக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
263 கொள்கலன்களை இறக்குமதி செய்ய வசதியளித்த நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கொள்கலன்களை மீண்டும் ஏற்றுமதி செய்யக் கோரி மாற்றுக் கொள்கைக்கான மையம் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவுகளை மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதிபதி ஏ.எச்.எம்.டி நவாஸ் மற்றும் நீதிபதி சோபிதா ராஜகருணா பிறப்பித்தனர்.
போலி ஆவணங்களைப் பயன்படுத்தி 2017 இல் கொண்டு வரப்பட்ட 263 கொள்கலன்களில், 21 கொள்கலன்கள் கடந்த செப்டம்பர் பிற்பகுதியில் மீண்டும் ஏற்றுமதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.