ரிதம் எஃப்.எம் வானொலி தொகுப்பாளர் ஒருவர் கார் மோதி உயிரிழந்துள்ளார்.
இன்று (16) அதிகாலை நுகேகொட, டெல்கண்ட பகுதியில் வேகமாக வந்த கார் அவர் மீது மோதியதில் உயிரிழந்தார்.
பிரபாஷ்வார விதானகே என்ற தொகுப்பாளர், இன்று அதிகாலையில் வீதியின் அருகே நின்று கொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்த கார் சாலையில் இருந்து விலகி அவர் மீது மோதியது.
கார் சாரதியை பொலிசார் கைது செய்துள்ளனர்.