முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து வவுனியாவிற்கு சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் இன்று தமது சேவையை நிறுத்திக் கொண்டுள்ளன. அரச- தனியார் பேருந்துகளிற்கிடையிலான ஒருங்கிணைந்த நேர அட்டவணையில் திருப்தியில்லையென குறிப்பிட்டே இன்று சேவையில் ஈடுபடாமல் தவிர்த்துள்ளனர்.
முல்லைத்தீவிலிருந்து வவுனியாவிற்கு சேவையில் ஈடுபடும் 17 பேருந்துகள், புதுக்குடியிருப்பிலிருந்து வவுனியா செல்லும் 10 பேருந்துகள் என சுமார் 27 பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை.
ஒருங்கிணைந்த நேர அட்டவணையில் தாம் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கொரோனா நெருக்கடியால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள், ஒருங்கிணைந்த நேர அட்டவணையில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும், வவுனியாவிலிருந்து முல்லைத்தீவிற்கு சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் தொடர்ந்து சேவையில் ஈடுபட்டு வருகின்றன.