பிக்பாஸ் வீட்டில் நேற்றைய நிகழ்ச்சியில் பயங்கரமான சண்டைகள் உருவெடுத்திருந்தது.
அதிலும், சனம் ஷெட்டி மற்றும் சுரேஷுக்கு இடையேயான பிரச்சனை கொஞ்சம் சூடு
பிடித்து நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருந்தது.
ஆனால், சுரேஷ் பாவம் அவர் விளையாட்டுக்கு பண்ணினார். அதை கோபப்பட்டு பெரிது படுத்திய சனம் வயது வித்தியாசம் பார்க்காமல் அவரை வாடா போடா என்றெல்லாம் பேசிவிட்டார்.
இந்நிலையில், தற்போது வெளியான ப்ரோமோவில் பட்டிமன்றம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
அதில், பேசிய போட்டியாளர்கள் அனைவரும் கருத்தை முன் வைக்க, நிஷா மட்டும் புறணி பேசுவது அசிங்கம், அப்படி பேசினால் தான் வெளியே இருக்கவங்க செருப்பால அடிப்பாங்க என சுரேஷை தாக்குவதுபோலவே பேசியுள்ளார் நிஷா.