கொழும்பு மாநகரசபையின் குறைந்தது 9 பொது சுகாதார அதிகாரிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
பேலியகொட மீன் சந்தையில் கொரோனா தொற்றாளிகளை கண்டறிய பீசீஆர் பரிசோதனைகளை மேற்கொண்ட நிலையிலேயே இவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதேவேளை கொழும்பில் நேற்று மாத்திரம் 5368 பேருக்கு பீசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கிடையில் நேற்றைய தினம் கண்டறியப்பட்ட 541 கொரோனா தொற்றாளிகளில் 304 பேர் கம்பஹாவை சேர்ந்தவர்களாவர். கொழும்பில் இருந்து 191 பேரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 42 பேரும் தொற்றாளிகளாக இனங்காணப்பட்டனர்.