சந்திரனின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதாக அமெரிக்காவின் நாசா நிறுவனம் அறிவித்துள்ளது.
செய்மதி தொழிநுட்பம் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களுக்கு அமைய சந்திரனில் இயற்கையான தண்ணீர் இருப்பதை உறுதியாக கூற முடியும் என நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.
சோபியா என்ற செய்மதி மூலம் இந்த தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
சந்திரனில் தண்ணீர் இருப்பதாக நாசா அறிவித்துள்ளமை இதுவே முதல் முறையாகும் என வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சந்திரனில் சூரியனின் ஒளிப்படாத குளிரான மற்றும் நிழான பிரதேசங்களில் தண்ணீர் இருப்பது உறுதியாகியுள்ளது.
இந்த தண்ணீரின் தன்மை பற்றி விஞ்ஞானிகள் தொடர்ந்தும் ஆய்வு நடத்த எண்ணியுள்ளதாகவும் நாசா குறிப்பிட்டுள்ளது.