யாழ்ப்பாணத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு சென்ற இலங்கையர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஒரு பைப்பர் படகில் தமிழகத்தின் வேதாரண்யம் தாலுகா கோடிக்கரையில் நேற்றிரவு வந்திறங்கியதாக தமிழக காவல்துறை இன்று காலை அறிவித்துள்ளது.
திருகோணமலை பகுதியை சேர்ந்த முகமது அன்சாரி (45) அவரது மனைவி சல்மா பேகம்(35) இவர்களது மகன் அன்சார் (10) ஆகிய மூன்று பேரும் கோடியக்கரை சவுக்கு காட்டில் வந்து இறக்கினர்.
இந்த மூன்று பேரையும் வேதாரண்யம் கடலோர காவல் படையினர் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
அவர்களிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதியாக வந்ததாக தெரிவித்துள்ளனர்.