அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தவறான தகவல்களை பரப்புவதாகவும் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவதாகவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அதிபர் ட்ரம்ப் தேர்தல் தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டி அளித்துக்கொண்டிருந்தார். இதனை அனைத்து ஊடகங்களும் நேரலையாக ஒளிபரப்பு செய்தன.
பேட்டியின்போது பேசிய ட்ரம்ப், ஜனநாயக கட்சியினர் சட்டவிரோத வாக்குகளைப் பயன்படுத்தி தேர்தல் வெற்றியை எங்களிடம் இருந்து திருட முயற்சிக்கிறார்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
சுமார் 17 நிமிடங்கள் தொடர்ந்து பேசிய ட்ரம்ப், திரும்பத் திரும்ப எதிர்க்கட்சி மீது குற்றச்சாட்டை கூறினார்.
இதனால் அதிருப்தி அடைந்த பல்வேறு அமெரிக்க ஊடகங்கள் நேரலையை பாதியில் நிறுத்தி விட்டன.
அதிபர் ட்ரம்ப் பேட்டியின் நேரலையை ஊடகங்கள் திடீரென நிறுத்தியது அமெரிக்க மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.