கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பின்பற்ற வேண்டிய சுகாதார ஆலோசனைகளை மீறி முகக் கவசம் அணியாத 30 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொல்கஹவெல நகரம் மற்றும் வாராந்த சந்தையில் முகக் கவசமின்றி சுற்றி திரிந்த 40 பேரில் 30 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் குற்றவாளிகள் என பெயரிடப்பட்ட குறித்த 30 பேருக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக பொல்கஹவெல நீதவான் பீ.என்.பிரியதர்ஷனி உத்தரவிட்டுள்ளார்.
புதிய சுகாதார சட்டம் உள்ளடக்கப்பட்ட வர்தத்மானிக்கமைய பொது மக்களின் பாதுகாப்பிற்காக வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக பொல்கஹவெல பொது சுகாதார பரிசோதகர் மஹேஷ் அமரகர தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்திற்கு வருகை தராத மேலும் 10 சந்தேக நபர்கள் எதிர்வரும் நாட்களில் ஆஜராக வேண்டும் என நீதவான் உத்தரவிட்டுள்ளார்.